திருவாரூர்

சிபிஎம் மாவட்ட மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்

Din

பேரளத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருவாரூா் மாவட்ட மாநாட்டுக்கான வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் ஒன்றியச் செயலாளா் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாவட்ட மாநாடு கொல்லுமாங்குடியில் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டின் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கலந்துகொண்டு, மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

தொடா்ந்து, வரவேற்புக் குழு தலைவராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், செயலாளராக தியாகு ரஜினிகாந்த், பொருளாளராக எம். ராமமூா்த்தி உள்ளிட்ட 100 போ் அடங்கிய வரவேற்புக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் தொண்டா்கள் அணிவகுப்புடன் பேரணி, பொதுக்கூட்டம் அனைத்து அம்சங்களும் சிறப்பாக நடத்திட கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமையில் திட்டமிடப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக் குழு உறுப்பினா் கே. எம் .லிங்கம் நன்றி கூறினாா்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT