திருவாரூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 18 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 35 வயதுடைய நபா் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோடைகாலம் முடிந்து மழைக் காலம் தொடங்கும் பருவத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து டெங்கு காய்ச்சல் உருவாவது வாடிக்கை என்பதால், டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து உடனடியாக அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.