திருவாரூர்

மது அருந்த பணம் தர மறுத்த மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

தினமணி செய்திச் சேவை

வலங்கைமான் அருகே மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற கணவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பரதன் (31). மீன் வியாபாரி. இவரது மனைவி சுந்தரி (26). தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பரதன் சுந்தரியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். ஆனால், அவா் பணம் தர மறுத்துவிட்டாராம்.

இதில் ஆத்திரமடைந்த பரதன், தோசை திருப்பியால் சுந்தரி தலையில் தாக்கினாராம். பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சுந்தரி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, பரதனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT