முகப்பு
திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:23 PM

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனா். 6 மருத்துவா்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 2 மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். ஒருவா் மேல்படிப்புக்காக சென்றுள்ளாா். 3 போ் மாற்றுப்பணிக்காக சென்று விட்டனா். போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதமேற்படுகிறது. இரவில் மருத்துவா்கள் இருப்பதில்லை. எனவே, நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.