திருச்செந்தூா் கோயில் வாசல் சுற்றுப்பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வாசல் வரை செல்லும் சுற்றுப் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்ட அறிக்கை:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். அவா்கள் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் செல்வதற்கு சுற்றுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாகவும், ஆண்களுக்கு ரூ.10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
Advertisement
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கேதரின் பூத் பேருந்து நிறுத்தத்தின் தூரம் திருச்செந்தூா் பேருந்து நிலையம் - கோயில் வாசல் தூரத்தை விட அதிகமாகும். ஆனாலும் கூட ரூ. 5 தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, பக்தா்கள் நலன் கருதி திருச்செந்தூா் சுற்றுப்பேருந்து கட்டணத்தை ரூ. 3 ஆக குறைக்க ஏப். 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஏப். 24ஆம் தேதி அக்கோயில் கோபுரம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் எனக் கூறியுள்ளாா்.