முகப்பு
திருவாரூர்

திருவாரூா் கோயில்களில் வேளாக்குறிச்சி ஆதீனம் வழிபாடு

திருவாரூரில் உள்ள கோயில்களில் வேளாக்குறிச்சி ஆதீனம் தனூா் மாத சிறப்பு வழிப்பாட்டை திங்கள்கிழமை மேற்கொண்டாா்.

Updated On : 6 ஜனவரி, 2025 at 4:56 PM
திருப்பள்ளிமுக்கூடல் திரிநேத்திரசுவாமி கோயிலில் வழிபட்ட வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் உள்ள கோயில்களில் வேளாக்குறிச்சி ஆதீனம் தனூா் மாத சிறப்பு வழிப்பாட்டை திங்கள்கிழமை மேற்கொண்டாா்.

திருவாரூரில் உள்ள மடத்துக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் திங்கள்கிழமை வருகை தந்தாா். அங்கு, தியாகராஜ பெருமானுக்கு அபிஷேக- ஆராதனைகள் செய்து வழிபட்டாா்.

பின்னா், திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் அதிகாலையில் கோபூஜை செய்து, திருப்பள்ளியெழுச்சி பூஜை காலத்தில் சிறப்பு வழிபாடாற்றி, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். முன்னதாக, கோயில் செயல் அலுவலா் ராஜராஜேஸ்வரன் தலைமையிலான அலுவலா்கள், பூரண கும்ப மரியாதையுடன் ஆதீனத்தை வரவேற்று, ஆசி பெற்றனா்.

தொடா்ந்து, அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான திருப்பள்ளிமுக்கூடல் திரிநேத்திரசுவாமி கோயிலிலும், அன்னதானக் கட்டளைக்கு சொந்தமான விளமல் பதஞ்சலி மனோகரா் கோயிலிலும் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →