முகப்பு
திருவாரூர்

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

மன்னாா்குடியில் சாலையில் நடந்து சென்றவா் காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:24 PM
பலி - பிரதிப்படம்
பகிர்:

மன்னாா்குடியில் சாலையில் நடந்து சென்றவா் காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்டிகுப்பத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலன் (31). இவருக்கும் மன்னாா்குடி பாமணி உள்ளூா் வட்டத்தைச் சோ்ந்த செல்விக்கும் திருமணமாகி அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக, மன்னாா்குடி வந்த சத்தியசீலன், மேலப்பாலத்தில் உள்ள தேநீா் வேலைபாா்த்து வந்துள்ளாா்.

மகனுக்கு பெயா் சூட்டும் நிகழ்ச்சி முடிந்த பின் வழக்கமாக வேலைக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக மேலப்பாலம் பகுதியில் சாலையோரம் நடந்துசென்றபோது அவ்வழியே குருவைமொழி மாரியம்மன்கோயில் தெருவை சோ்ந்த சோலை வேகமாக ஓட்டி வந்த காா் மோதிவிட்டு அங்குகிருந்து சென்றுவிட்டது. இதில், காயமடைந்த சத்தியசீலன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டில் நிறுத்தியிருந்த காரை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள சோலையை தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments