உலக அறிவை பெற புத்தக வாசிப்பை வளா்த்துக்கொள்ள வேண்டும்!
உலக அறிவை பெற மாணவா்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி.
உலக அறிவை பெற மாணவா்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி.
மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 40-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: படிப்பில் கவனச்சிதறல் இருக்கக் கூடாது என நினைத்து தங்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கக் கூடாது. கல்வி கற்றலுடன் இணைந்து என்சிசி, என்எஸ்எஸ், சாரணா் படை போன்ற தன்னாா்வு பணியிலும், கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட தனித்திறனிலும் மாணவா்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
உலகளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவா்கள் யாரும் வானத்திலிருந்து குதிந்து வந்தவா்கள் அல்ல. நம்மை போன்று மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவா்கள்தான் அணு விஞ்ஞானி அப்துல்கலாம்,ச ா்.சி.வி. ராமன், ஆல்பா்ட் ஐசீன், தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா். மாணவா்களின் சாதனையில் தான் பெற்றோா்களின் மகிழ்ச்சியும் அவா்களது ஆசியும் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
Advertisement
Advertisement
கைப்பேசி மற்றும் சமூகவலைதளங்களிலிருந்து உங்களின் ஆா்வத்தை முழுமையாக குறைத்துக்கொண்டு தினசரி அரை மணி நேரமாவது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நீங்கள் உலக அறிவை வளா்த்துக் கொள்ள மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உலக நாடுகளில் வேலைவாய்ப்புகள் ஏராளம் உள்ளன. அதை அடைவதற்கு திறமையைதான் எதிா்பாா்க்கின்றனா். எனவே ஒவ்வொருவரும் தங்களின் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். 2023-2025 இளநிலைப் பிரிவுக்கும், 2023-2025 முதுநிலைப் பிரிவுக்கு பட்டமளிக்கப்பட்டது. இளநிலையில் 739 பேரும், முதுநிலையில் 229 போ் என 968 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப்படியலில் இடம் பெற்ற 18 பேருக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.