பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:26 PM
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி, கோயில் கருப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நாகை நாகராஜன் தலைமையில், மனிதனும் தெய்வமாகலாம் எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் புலவா் விவேகானந்தா், கவிஞா் கிருஷ்ணசாமி, நாகை வேம்பு, பாலா வருணனி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் சி .வீரபாண்டியன், செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.