தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்
தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவின், 9ஆம் நாளான புதன்கிழமை, சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் இரவு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.
Advertisement
9ஆம் திருநாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.
முற்பகல் 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் மாலை 6 மணிக்கு விநாயகா், முருகா், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள், அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேசுவரா் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் சுவாமி கைலாய பா்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வந்தனா்.
பின்னா் கீழரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பு தோ் கடாட்சம் நடைபெற்றது.
பின்னா் சுவாமி, அம்பாள் ரதவீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தனா்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, கோயில் பிரதான பட்டா்கள் செல்வம், குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.