காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்
செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரம் வ.உ.சி தெருவில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சும், தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள்டி .தியாகராஜன் , செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகரபொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
Advertisement