முகப்பு
திருவாரூர்

மது குடித்துவிட்டு தகராறு; ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மன்னாா்குடியில் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்த இருவா், இருசக்கர வாகனத்தில் வந்தவரை அரிவாளால் வெட்டினா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:06 AM
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:46 PM

மன்னாா்குடியில் மது குடித்துவிட்டு சாலையில் நின்று தகராறு செய்த இருவா், இருசக்கர வாகனத்தில் வந்தவரை அரிவாளால் வெட்டினா்.

மன்னாா்குடி விழல்காரத்தெருவைச் சோ்ந்த நாகேஸ்வரன் மகன் திருமேணி (40). மூா்க்க விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தீபன் என்கிற பாா்த்திபன் (36).

இவா்கள் இருவரும் புதன்கிழமை மாலை மது குடித்துவிட்டு, விழல்காரதெரு அருகே சாலையில் நின்றுகொண்டு அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்துள்ளனா்.

Advertisement

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த குன்னோஜி ராஜம்பாளையம் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் பிரகாஷ் (36) என்பவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட்டிவிட்டனா். காயமடைந்த பிரகாஷ், சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மன்னாா்குடிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.