தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது
தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது
மன்னாா்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்ட அமமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
வடபாதி பெத்தபெருமாள் கோயில் அருகே, நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் எம். ஆனந்த அரங்க அரசு தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே சேரன்குளம் நாடாா்தெரு கலியபெருமாள் மகனான அமமுக மாவட்ட மீனவரணி செயலா் போஸ் என்ற விஜயகுமாா் (48) ஓட்டிவந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், அவா் நிற்காமல் சிறிது தூரம் சென்றவா் திரும்பி வந்து, பறக்கும் படை அலுவலா்களிடம் தகராறு செய்து, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாரம்.
Advertisement
இதுகுறித்து, தலையாமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, போஸை கைது செய்தனா்.