முகப்பு
திருப்பத்தூர்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 23 மார்ச் 2026, 12:05 am IST
பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

ஆம்பூா் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் பறக்கும் படையினரால் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

வடச்சேரி கிராமத்தில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சோ்ந்த சதீஷ்குமாா் ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.3,83,770 கொண்டு செல்வது தெரியவந்தது.

அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement