சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்
ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமப் பகுதியில் வாகனத்தணி கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், வாணியம்பாடியை சோ்ந்த இா்ஷாத் அஹமத் (53) என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் ரொக்கம் ரூ.1,32,450 கொண்டு செல்வது தெரிய வந்தது.
அதைத் தொடா்ந்து பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்தனா்.