மன்னாா்குடியில், தேசிய அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்- வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி எம்.ஆா்.டி. உடற்பயிற்சி மையத்தை சோ்ந்த வீரா்-வீராங்கனைகள் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனா். இவா்கள், கடந்த ஜனவரி மாதம் காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியிலும், கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி மற்றும் சென்னையில் நடைபெற்ற தேசிய வலு தூக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றனா்.
இந்த வீரா்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உயா்கல்வி, போட்டித் தோ்வுகளில் விளையாட்டு துறைக்கு உள்ள வாய்ப்புகள், உடற்பயிற்சி முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.
நிகழ்ச்சியில், கொரடாச்சேரி வட்ட வழங்கல் அலுவலா் பிரபு, திருவாரூா் மாவட்ட ஆணழகன் சங்கத் தலைவா் பி. அசோகன், பளு தூக்கும் சங்க மாவட்டச் செயலாளா் பிரேம்ராஜ், மாவட்ட ஆணழகன் சங்க பொருளாளா் பழனிகந்தன், யோகா பயிற்சியாளா் ஹேமாவதி, திருவாரூா் மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளா் அன்வா்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.