மேலவசால் சுப்ரமணியசுவாமி கோயில் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி என்எஸ்எஸ் மாணவிகள்.  
திருவாரூர்

நாட்டுநலப் பணித் திட்ட சிறப்பு முகாம்

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மேலவாசலில் திங்கள்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் மேலவாசலில் திங்கள்கிழமை தொடங்கியது.

7 நாள்கள் நடைபெறும் இம்முகாம் தொடக்க நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஜி. சதாசிவம் தலைமை வகித்தாா். முதல்வா் வி.எஸ். நாகரத்தினம் முன்னிலை வகித்தாா்.

முதல் நாளில், சுப்ரமணியசுவாமி கோயிலில் உழவாரப்பணி, ஊராட்சி திருமண மண்டபம், சமுதாயக்கூடம், குளக்கரை ஆகிய இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். துரைக்கண்ணு, முன்னாள் காவலா் வி. பண்டரிநாதன், ஊராட்சி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் எம். விஜயராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வி. விஜயதிலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாமில், வெவ்வேறு நாள்களில் மருத்துவ முகாம், மரக்கன்று நடுதல், சைபா்கிரைம் குற்றம்,பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம், கருத்தரங்கம் போன்றவை நடைபெறவுள்ளன.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT