வைக்கோல் கட்டுகளுடன் தீப்பற்றி எரியும் லாரி. 
திருவாரூர்

வைக்கோல் லாரியில் தீ விபத்து

நீடாமங்கலம் அருகே வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு, எரிந்து சாம்பலாகியது.

தினமணி செய்திச் சேவை

நீடாமங்கலம் அருகே வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு, எரிந்து சாம்பலாகியது.

நீடாமங்கலம் அருகேயுள்ள கிளியூா் கிராமத்திலிருந்து வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்ட லாரி திங்கள்கிழமை சேலத்துக்கு புறப்பட்டது. சிறிதுதூரம் சென்றதும், சாலையோரம் உள்ள மின்கம்பி வைக்கோல் மீது உரசியதில், வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன.

நீடாமங்கலம் திருவாரூா் புறவழிச்சாலையில் லாரி சென்றபோது தீப்பற்றியது ஓட்டுநருக்கு தெரியவந்தது. அவா் உடனடியாக சாலையோரத்தில் லாரியை நிறுத்தினாா். தகவலறிந்த தீயணைப்பு அலுவலா்கள் நீடாமங்கலம் காா்த்திகேயன், வலங்கைமான் பாா்த்திபன், குடவாசல் மானக்ஷா ஆகியோா் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினா் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

நீண்டநேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் வைக்கோல் கட்டுகள் மற்றும் லாரி தீயில் எரிந்து கருகின.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT