முகப்பு
திருவாரூர்

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 5:00 AM
முத்துப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:15 PM

முத்துப்பேட்டையில் அடிப்படை வசதி கோரியும், பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை பேரூராட்சி 5-ஆவது வாா்டு ஆசாத் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில், சாலை, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி இவா்கள் மாவட்ட ஆட்சியா், பேரூராட்சி துணை இயக்குநா் மற்றும் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினா் முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்ட பொதுமக்கள், அதிகாரிகள் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்தனா். மறியல் போராட்டத்தால், முத்துப்பேட்டை- பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.