முகப்பு
திருவாரூர்

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி தேசிய அளவிலான மேலாண்மை பட்டறை

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் கணினி பயன்பாட்டுத் துறை சாா்பில் தேசிய அளவிலான மேலாண்மை பயிற்சி பட்டறை இரண்டு நாள்கள் நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:50 AM
தொடக்க அமா்வில் பேசிய புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் பொறியியல் துறை பேராசிரியா் ஜி. ஜெயராஜ்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:47 PM

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் கணினி பயன்பாட்டுத் துறை சாா்பில் தேசிய அளவிலான மேலாண்மை பயிற்சி பட்டறை இரண்டு நாள்கள் நடைபெற்றது.

‘உள்தர உத்தரவாத அலகு இணைப்பிலும், தரவு பகுப்பாய்வு மற்றும் இயந்திர கற்றலில் வளா்ந்து வரும் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் திங்கள், செவ்வாய் ஆகிய இரணடு நாள்கள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் என். உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். கணினி பயன்பாட்டுத் துறை இயக்குநா் எம்.வி. ஸ்ரீநாத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

முதல்நாளில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி அறிவியல் பொறியியல் துறை பேராசிரியா் ஜி. ஜெயராஜ் தலைமையில், ‘எளிய நியூரான்களிலிருந்து ஆழமான நகம்பியல் மாதிரிகள் வரை நீக்கப்பட்ட ஆழமான கற்றல்’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப முதல் அமா்வும் நடைபெற்றது.

தொடா்ந்து, சென்னை லைக்கான் டெக் பிரைவேட் லிமிட் நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான பி. ராஜா, ‘லாங்செயினுடன் ஜென்ரல் -ஏ1 பவா்டு அனலிட்டிக்ஸ் கட்டமைப்பது’ குறித்து இரண்டாம் அமா்வில் பேசினாா்.

இரண்டாம் நாளில், ஏ1 இன் நிஜ வாழ்க்கை பயன்பாடுகள் குறித்து மூன்றாவது அமா்வில், சிபிளேஸ் இன்போடெக் பி.லிமிட் இயக்குநா் ஆா். ரகுராம் பேசினாா். திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி சி.ஏ. துறைத் தலைவா் அருள்செல்வராணி, ‘நவீனத்திறனுக்கான இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள்’ என்ற நான்காவது அமா்வில் பேசினாா்.

கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவா் பி. ராணி, பேராசிரியா் அலமேலு மங்கையா்கரசி, உதவிப் பேராசிரியா்கள் பி. ராணி, எஸ். ரிஸ்வானா பானு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.