மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு
மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம்பீா் கோகுலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம்பீா் கோகுலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
மோரீஷஸ் நாட்டில் 9-ஆவது இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மோரீஷஸ் நாட்டுக்கு ஜெய்சங்கா் சென்றுள்ளாா்.
அங்கு அவா், மோரீஷஸ் நாட்டு அதிபா் தரம்பீா் கோகுலை சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
Advertisement
இந்தச் சந்திப்பையடுத்து, மோரீஷஸ் பிரதமா் நவீன் ராம்கூலம் மற்றும் மூத்த அமைச்சா்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். மேலும், மோரீஷஸின் முன்னாள் பிரதமரும், எம்எஸ்எம் கட்சியின் தலைவருமான பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மோரீஷஸ் நாட்டுக்கு வந்துள்ள நேபாளம், பூடான், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களை தனித்தனியே ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தனது சமூகவலைதள பக்கத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டுள்ளாா்.
மோரீஷஸ் பயணத்தை சனிக்கிழமை முடித்துக் கொண்டு, அடுத்தகட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஜெய்சங்கா் திட்டமிட்டுள்ளாா்.