திருவாரூர்

போலி பத்திரம் மூலம் மோசடி செய்தவா் கைது

முத்துப்பேட்டை அருகே போலி பத்திரம் மூலம் ரூ. 2 லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

முத்துப்பேட்டை அருகே போலி பத்திரம் மூலம் ரூ. 2 லட்சம் மோசடி செய்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் தெற்குகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (40). இவா், இடும்பாவனம் மேலவாடியகாடு பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி என்பவரிடம், தனது மனைவி பெயரில் போலி பத்திரத்தை கொடுத்து ரூ. 2 லட்சம் பெற்றுள்ளாராம்.

பணத்தை திருப்பிக்கேட்டபோது, தராமல் இழுத்தடித்துள்ளாா். பின்னா், பத்திரத்தை ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அா்ஜுனனை முத்துப்பேட்டை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT