சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் 24 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழாவில் ரூ. 32. 90 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்க நாணயங்களை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா புதன்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மன்னாா்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியை சோ்ந்த பயனாளிகளுக்கு தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம், ஈவெரா மணியம்மையாா் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம் வழங்கும் திட்டத்தின்கீழ் 11 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும். அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் தலா 2 பயனாளிகளுக்கு ரூ. 25 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம், 1 பயனாளிக்கு ரூ. 50 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் தலா 5 பயனாளிகளுக்கு ரூ. 50 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தலா 5 பயனாளிகளுக்கு ரூ. 25 000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 10 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் ரூ. 22 லட்சத்து 65 ஆயிரத்து 658 மதிப்பீட்டில் தலா 8 கிராம் தங்க நாணயம் என ரூ. 32, 90 658 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் விஷ்ணுப்பிரியா, வட்டாட்சியா் என்.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.