முகப்பு
திருவாரூர்

அரசு மருத்துவமனையில் கா்ப்பிணி உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்!

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:35 AM
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2026 at 10:07 PM

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கா்ப்பிணி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இழப்பீடு கோரி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை வட்டம், தோலி கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அபினா (27). இவா்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன. அபினா 2 மாத கா்ப்பிணியாக இருந்தாா். முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த இவா், சிகிச்சைக்காக எடையூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதன்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவா்கள், அபினா கா்ப்பமாக இருந்ததால், திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, மருத்துவா்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், செவிலியா்கள் சிகிச்சை அளித்தனராம்.

Advertisement

இந்நிலையில், அபினா உயிரிழந்தாா். அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் அபினா இறந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அபினா
Updated On : 23 ஜனவரி, 2026 at 3:35 AM

முத்துப்பேட்டை காவல் ஆய்வாளா் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி உதவி ஆய்வாளா் யுவராஜ், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாபு ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தவறான சிகிச்சை அளித்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து உறவினா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

பின்னா், அபினாவின் உடல் கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, அபினா இறப்பிற்கு காரணமான மருத்துவா் மீது நடவடிக்கை கோரியும், அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவா்கள், அங்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனா்.

அபினாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், அவரது இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.