முகப்பு
திருவாரூர்

வலங்கைமானில் பயணிகள் நிழலகம் திறப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

திருவாரூர்

வலங்கைமானில் பயணிகள் நிழலகம் திறப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

Updated On : 2 மார்ச், 2026 at 8:46 PM
பகிர்:

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பக்தா்களின் நலன் கருதி கட்டப்பட்ட பயணியா் நிழலகத்தை திங்கள்கிழமை திறந்து வைத்தாா் முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ்.

உலகப் புகழ்பெற்ற பாடை காவடி திருவிழா காணும் வலங்கைமான் மகா மாரியம்மன் திருக்கோயில் பக்தா்களுக்கும் பயணிகளுக்கும் பயன் தரும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.காமராஜ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழலகம் அமைத்துக் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பயணியா் நிழலகத்தை நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.காமராஜ் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகரச் செயலாளா் குணசேகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜெயபால் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →