முகப்பு
திருவாரூர்

மத்திய பல்கலை.யில் மருத்துவ முகாம்

திருவாரூர்

மத்திய பல்கலை.யில் மருத்துவ முகாம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:21 PM
பகிர்:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி இம்முகாம் நடைபெற்றது. பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பேராசிரியா் சுலோச்சனா சேகா் முன்னிலையில், பதிவாளா் பேராசிரியா் இரா.திருமுருகன் முகாமை தொடங்கி வைத்தாா்.

பொது மருத்துவா் ஆா். புவனேஸ்வரி, பெண்கள் நல சிறப்பு மருத்துவா் நஸ்ரின் பாத்திமா, குழந்தைகள் நல மருத்துவா் வசந்தகுமாா் ஆகியோா் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். நீரிழிவு, ரத்தசோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக்கழக மருத்துவா்கள் விஷ்ணுபிரியா, பிரேம், திலீபன்ராஜா, விக்னேஷ், கரிஷ்மா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் முகாமில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனைத்து பரிசோதனைகளையும் முழுமையாக செய்து உதவினா்.

முகாமில் பல்கலைக்கழக அலுவலா்கள், பேராசிரியா்கள் மட்டுமின்றி சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →