கூட்டுறவு வங்கிக் கிளை திறப்பு
கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளையை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா.
கூத்தாநல்லூரில் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டல இணைப் பதிவாளா் க. சித்ராவின் வழிகாட்டுதலின்படி, மன்னாா்குடி கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை கூத்தாநல்லூரில் திறக்கப்பட்டது. மன்னாா்குடி சரகத் துணைப் பதிவாளா் பா. பிரபா குத்துவிளக்கேற்றி, வங்கிச் சேவையை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஞா. அருள்குமாா், கூட்டுறவு சாா்பதிவாளா் மற்றும் பொதுமேலாளா் (பொ) பெ. ஜெயராம், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.