முகப்பு
திருவாரூர்

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மார்ச், 2026 at 1:09 AM
பகிர்:

மன்னாா்குடி தேரடி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் எடுத்துவரப்பட்டு, கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவா் சக்தி விநாயகா் மற்றும் துா்க்கை அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி உற்சவம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →