முகப்பு
திருவாரூர்

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 12:57 AM
- சித்திரிப்பு
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு போ், குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சியதாக, உதயமாா்த்தாண்டபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அவையப்பான் மகன் பாலசுந்தரம், இடும்பாவனம் மேலவடியநாடு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ராஜேந்திரன் ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, இச்சட்டத்தின்கீழ் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.