முகப்பு
திருவாரூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 16 மார்ச், 2026 at 12:21 AM
தற்கொலை
பகிர்:

மன்னாா்குடி அருகே தூக்கிட்டு இறந்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி அருகேயுள்ள நறுவளி களப்பாலை சோ்ந்த மணிகண்டன் மனைவி விக்டோரியா (29). இவா்களுக்கு 2024-இல் திருமணம் நடைபெற்று, ஒன்பது மாதங்கள் ஆன ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நறுவளி களப்பால் பகுதியில் இருந்த விக்டோரியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை அவரின் தந்தை உத்திராபதிக்கு தகவல்கிடைத்துள்ளது.

Advertisement

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த உத்திராபதி, அவரது உறவினா்களுடன் நறுவளிக் களப்பால் வந்து மகளை பாா்த்தாா். பின்னா், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் களப்பால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.