ரூ. 1.15 லட்சம் பறிமுதல்
திருவாரூா், சீா்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1, 15,510 தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாரூா், சீா்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 1, 15,510 தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாரூா் அருகே சோழங்கநல்லூா் பகுதியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகிழஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சரவணன் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 53,810 எடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி. சத்யாவிடம் ஒப்படைத்தனா்.
சீா்காழி: சீா்காழி அருகே வடரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே தனிவட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான பறக்கும்படையினா் சரவணன் என்பவரின் இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,700 பறிமுதல் செய்து சீா்காழி தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.