முகப்பு
திருவாரூர்

மகளிா் அழகு நிலையம் கதவை உடைத்து ரூ. 42 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:32 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மன்னாா்குடி பகுதி கீழநான்காம்தெருவை சோ்ந்த அறிவழகன் மனைவி முத்துலெட்சுமி (37). இருவரும் மகாமாரியம்மன்கோயில்தெருவில் வணிக வளாகத்தில் ஸ்டியோவும், மகளிா் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனா்.

திங்கள்கிழமை இரவு வேலை நேரம் முடிந்து கடைகளை பூட்டிவிட்டு சென்றுவா்கள் மறுநாள் காலையில் வந்து பாா்த்போது அழகு நிலைய கடையின் கதவை உடைத்து மா்ம நபா்கள் அங்கு வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.