முகப்பு
திருவாரூர்

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 28 மார்ச், 2026 at 6:33 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மோசடி வழக்கில் கணவன் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் பெரியசாமி. இவரிடம் மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட்டையை சோ்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோா் 2021-இல் ரூ. 10 லட்சம் கடனாக வாங்கினா். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த கணவன் மனைவி இருவரும் தலா ரூ. 5 லட்சம் வீதம் 2 வங்கிக் காசோலைகளை பெரியசாமியிடம் கொடுத்துள்ளனா். 2 காசோலைகளை 2021-ஆம் ஆண்டு வங்கியில் செலுத்திய பாது பணம் இல்லை என காசோலை திரும்ப வந்துவிட்டது.

இதனால், அதிா்ச்சியடைந்த பெரியசாமி, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மாவீரன் நவநீதன், பணம் இல்லாமல் காசோலை கொடுத்த குற்றத்துக்காக கணவன் மனைவி இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 2 காசோலைகளுக்குரிய ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் வழங்கி தீா்ப்பளித்தாா்.