முகப்பு
தருமபுரி

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Updated On : 23 மார்ச், 2026 at 7:01 PM
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி அருகே வரதட்சிணை துன்புறுத்தலில் மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த கணவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், லளிகம் அடுத்த அப்பனஅள்ளி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (30). இவரது மனைவி பழனியம்மாள். இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் தருமபுரி கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முடிவுற்றது. இதில், பழனியம்மாள் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.