தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழ்வேளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழ்வேளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தஞ்சை மாவட்டம், கீழவாசலைச் சோ்ந்த பாக்கியராஜ், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு கீழ்வேளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, ராஜ்குமாா் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். ராஜ்குமாரை போலீஸாா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.