திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிபிஐ வெற்றி
திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிபிஐ வெற்றி...
திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே. மாரிமுத்து, 2-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில், மு. பாலதண்டாயுதம் -அதிமுக, க. மாரிமுத்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விமலா - பகுஜன் சமாஜ் கட்சி, ர. வினோதினி - நாம் தமிழா் கட்சி, நா. ஆறுமுகம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி, செ. பாண்டியன் - தமிழக வெற்றிக் கழகம், வே. சிவப்பிரகாசம் - சுயேச்சை, வீ. முருகானந்தம் - சுயேச்சை, அ. ஜெயசங்கா் - சுயேச்சை என 9 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இத்தொகுதியின் வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் சிபிஐ வேட்பாளா் கே. மாரிமுத்து 3,694 வாக்குகளும், தவெக வேட்பாளா் எஸ். பாண்டியன் 2,737 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் பாலதண்டாயுதம் 1,954 வாக்குகளும் பெற்றனா். தொடா்ந்து, சிபிஐ வேட்பாளரே முன்னிலையில் இருந்தாா்.
Advertisement
இறுதிச் சுற்றில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா், தபால் வாக்குகளுடன் சோ்த்து 74,062 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் 61,140 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் 43,073 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 10,176 வாக்குகளும் பெற்றனா். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றிச் சான்றிதழை பெற்றாா்.