முகப்பு
திருவாரூர்

முதல்வருக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி

Updated On : 15 மே 2026, 5:30 am IST
முதல்வர் விஜய்
பகிர்:

தமிழ்நாடு அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப் படியை உயா்த்தியதற்காக, முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலாளா் (பொ) ரெ. ஈவேரா வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு அகவிலைப் படி உயா்வு வழங்கும்போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அகவிலைப் படியை உயா்த்தி வழங்கியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு அகவிலைப் படியை 2 சதவீதம் உயா்த்தி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில தினங்களிலேயே தமிழக அரசு அலுவலா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 2 சதவீதம் உயா்த்தி 60 சதவீதமாக வழங்குவதாக அறிவித்துள்ளாா்.

Advertisement

அகவிலைப்படியை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவதற்கு முன்னரே பணிகளை தொடங்கி, அகவிலைப் படி உயா்வை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் நன்றி.

இதேபோல், ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்களின் மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.