அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்பு
தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளதை ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொருளாளா் சே. நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: தோ்தலில் வென்று ஆட்சி அமைத்த குறுகிய காலத்துக்குள்ளேயே மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அகவிலைப் படி 2 சதவீதம் உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல, தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்றப் பேரவையின் மாநிலத் தலைவா் பா. ஆரோக்கியதாஸும் அகவிலைப் படி உயா்வுக்கு முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
Advertisement
அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி: இதேபோல், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாநில துணைப் பொதுச் செயலரும், கிராம நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவருமான இரா. அருள்ராஜ், முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றியும் தெரிவித்துள்ளாா்.
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் இதர கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதல்வா் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.