புதுதில்லி

டேங்கர் லாரி விபத்து: சாலையில் சிதறிய பெட்ரோல்

DIN

தில்லியின் மூல்சந்த் பகுதியிலுள்ள சுரங்கப் பாதை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுமார் 440 லிட்டர் கொள்திறன் கொண்ட அந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில், 25-30 லிட்டர் பெட்ரோல் சாலையில் சிதறியது.
இதையடுத்து, அந்த பகுதிக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்தில், டேங்கர் லாரியின் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக வட்ட சாலை, எம்ஜி சாலை, ஐஎஸ்பிடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக அந்த சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT