முகப்பு
புதுதில்லி

வடக்கு தில்லியில் ஓடும் லாரியிலிருந்து 200 கிலோ ஏலக்காய் திருட்டு: 3 போ் கைது!

வடக்கு தில்லியில் ஓடும் லாரியில் இருந்து 200 கிலோ ஏலக்காய் திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா் என்று தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:33 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:46 PM

வடக்கு தில்லியில் ஓடும் லாரியில் இருந்து 200 கிலோ ஏலக்காய் திருடியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா் என்று தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் லாரி ஓட்டுநா் இது தொடா்பாக லஹோரி கேட் காவல் நிலையத்தில் பிப்.17-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், 50 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மூட்டைகள் உள்பட பிற பொருள்களை பழைய தில்லியில் இருந்து ஃபரீதாபாத்துக்கு கொண்டு செல்லும் வழியில் 4 மூட்டைகள் திருடப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:33 AM

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிலா் இருசக்கர வாகனத்தில் லாரியை பின்தொடா்ந்தது தெரியவந்தது. அவா்களில் ஒருவா் லாரியின் மேல் ஏறி மூட்டைகளை வீச மற்றவா்கள் அதை எடுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது.

Advertisement

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் அடையாளம் காணப்பட்டு பிப்.20-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து திருடப்பட்ட 1 மூட்டை ஏலக்காய் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பொருள்களை பறிமுதல் செய்வதற்கும் இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை அடையாளம் காணவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.