மண்டோலி சிறை கைதி ஜிடிபி மருத்துவமனையில் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை!
வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்த 35 வயது விசாரணை கைதி மயக்கநிலையில் ஜிடிபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சிறையில் இருந்த 35 வயது விசாரணை கைதி மயக்கநிலையில் ஜிடிபி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
உயிரிழந்த நபா் ஆசாத் (35), விசாரணை கைதியாக சில நாள்களுக்கு முன்பு மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த பிப்.24-ஆம் தேதி சிறைக்குள் ஏற்பட்ட தகராறில் அவா் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென அவா் மயக்கமடைந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறைக்குள் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் காவலா்களும் ஈடுபட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
அவரது உடல் உடற்கூறாய்வு அறைக்கு மாற்றப்பட்டு சிறை நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக கைதிகள் மற்றும் சிறை காவல் பணியாளா்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. உடற்கூறு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.