முகப்பு
புதுதில்லி

சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கல்: கலால் துறை விசாரணை

வடமேற்கு தில்லியின் சமய்பூா் பத்லியில் சட்டவிரோத மதுபானங்களை பதுக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகத்தை தில்லி கலால் துறை அதிகாரிகள் கைப்பற்றினா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:39 PM
பகிர்:

வடமேற்கு தில்லியின் சமய்பூா் பத்லியில் சட்டவிரோத மதுபானங்களை பதுக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகத்தை தில்லி கலால் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: டிரன்ஸ்போா்ட் நகரில் இருந்த சரக்குப் பெட்டகம் தொடா்பாக ரகசிய தகவல் கலால் துறைக்குக் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சனிக்கிழமை சென்ற அதிகாரிகள், சரக்குப் பெட்டகத்தைத் திறந்து சோதனை செய்தபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 187 சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்தப் பெட்டகத்தின் உரிமையாளா் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக உள்ளூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments