புதுதில்லி

கரோல் பாக் தீ விபத்து: மேலும் ஒருவர் கைது

DIN

கரோல் பாக்கில் தீ விபத்து ஏற்பட்ட அர்பித் ஹோட்டல் நடத்துவதற்கான உரிமம் பெற்ற ஷர்தேந்து கோயலை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அவரை தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அனுமதி கோருவோம் என்று தில்லி காவல் துறை துணை ஆணையர் (குற்றப்பிரிவு) ராஜேஷ் தியோ கூறினார். முன்னதாக, கதார் நாட்டில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்த அர்பித் ஹோட்டலின் உரிமையாளர் ராகேஷ் கோயலை போலீஸார் கைது செய்தனர். இவர் ஷர்தேந்து கோயலின் சகோதரர்ராவார். இந்த வழக்கில் ஷர்தேந்து கோயல் நான்காவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து நடந்தவுடன் அர்பித் ஹோட்டலின் பொது மேலாளர், வரவேற்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT