புதுதில்லி

கரோல் பாக்: பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

DIN


மத்திய தில்லி, கரோல் பாக் பகுதியில் பாழடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  இந்த விபத்து தொடர்பாக இரவு 8 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.  உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதன் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை' என்றார் அவர். கரோல் பாக் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT