புதுதில்லி

கார் விபத்தில் தொழிலதிபர் பலி

DIN

தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் சாலைத்  தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் மனை வணிக தொழிலதிபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நொய்டா செக்டார் 39 காவல் நிலைய அதிகாரி உதய் பிரதாப் சிங் கூறியதாவது:  நொய்டா செக்டார்-50இல் உள்ள மகாகுன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் யோகேந்திர சிங் (53 ). அவர்  மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு அவர் செக்டார் 37 பகுதியில் உள்ள சாலை வழியாக தனது காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கார் திடீரென சாலைத் தடுப்பு மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் கார் நொறுங்கியது. காருக்குள் யோகேந்திர சிங் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை காரில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT