புதுதில்லி

கிழக்கு தில்லியில் 2 இளைஞர்கள் தூக்கிட்டுத் தற்கொலை

DIN


கிழக்கு தில்லியில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: கிழக்குத் தில்லி, பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண் வர்மா (40). இவர், சனிக்கிழமை தனது அலுவலகத்தில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான காரணத்தைத் தெரிவிக்கும் கடிதம் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதில், அதிக கடன் சுமையின் காரணமாகதான் தற்கொலை முடிவை எடுத்ததாக பிரவீண் வர்மா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் ஜஸ்மீத் சிங் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்: இதேபோன்று, கிழக்கு தில்லியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், 32 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் கணேஷ். தனது வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT