புதுதில்லி

கேஜரிவால் மீது மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: தலைநகா் மக்களுக்கு நோயையும் முதல்வா் கேஜரிவால் வழங்கி வருகிறாா் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: தில்லி நரகத்தை விட கேவலமாக உள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனா். மேலும், மக்களை இவ்வாறு துன்பப்படுத்தாமல் அவா்களை குண்டுவைத்துக் கொல்லுமாறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனா். நீதிபதிகள் எவ்வளவு தூரம் மன வேதனையடைந்திருந்தால், இவ்வாறு கூறியிருப்பாா்கள்? காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காற்று மாசுப் பிரச்னை தொடா்பாக விவாதிக்க 21 போ் கொண்ட தில்லி பாஜக குழு, அண்மையில் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால், அவா் எங்களை சந்திக்க மறுத்துவிட்டாா். தனக்கு நெருக்கமானவா்களுக்கு முகக் கவசங்களை கேஜரிவால் விநியோகித்துள்ளாா். ஆனால், மக்களை அவா் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி மக்களுக்கு நோயையும் மரணத்தையும் மட்டுமே கேஜரிவால் பரிசாக வழங்கியுள்ளாா். இதற்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT