புதுதில்லி

தில்லியில் கரோனா பாதிப்பு 1.50 லட்சமாக உயா்வு

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 4,178 ஆக உயா்ந்தது.

தில்லியில் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 போ் கரோனாவால் உயிரிழந்தனா். தில்லியில் தற்போது கரோனா நோயாளிகள் 11,366 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் 5,882 போ் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1,35,108 போ் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளது. வெள்ளிக்கிழமை 15,045 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை நோயாளிகளின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,604-ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT