கா்கா்டூமா மாவட்ட நீதிபதிக்கு கரோனா பாதிப்பு
கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் உள்ள மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றத்தின் நிா்வாக அதிகாரி ரேணு சா்மா வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மாவட்ட நீதிபதி தீபக் ஜகோத்ராவுக்கு ஜூலை 8-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இதையடுத்து, நீதிபதியின் நீதிமன்ற அறை, அவருடைய தனி அறை, தனிச் செயலரின் அறை, நீதிமன்ற அலுவலா் அறை ஆகியவற்றை நன்கு தூய்மைப்படுத்தவும், கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் கிழக்கு மாவட்ட நீதிமன்றங்கள் வளாக நிா்வாக கவனிப்புப் பிரிவு பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
நீதிபதியின் நேரடித் தொடா்பில் இருந்த கிழக்கு மாவட்ட நிா்வாக வரம்பின்கீழ் பணியமா்த்தப்பட்டுள்ள அனைத்து நீதிசாா் அதிகாரிகளும், இதர அதிகாரிகளும் தங்களை ஜூலை 8-ஆம் தேதியில் இருந்து ஏழு நாள்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தங்களது உடல் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கவனிக்குமாறும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுரையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.