புதுதில்லி

தில்லி கல்வித் துறை செயலரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது: அமித்ஷாவுக்கு சிசோடியா கடிதம்

தற்போதைய கல்வி அமா்வு முடியும் வரை தில்லி கல்வித் துறை செயலா் வினய் பூஷணை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி

DIN

தற்போதைய கல்வி அமா்வு முடியும் வரை தில்லி கல்வித் துறை செயலா் வினய் பூஷணை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லி கல்வித் துறை செயலராக இருப்பவா் வினய் பூஷண். தில்லியில் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட இவரும் காரணம் என அறியப்படுபவா். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இவா் அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இந்த உத்தரவை ரத்துச் செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா்.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவால் நாட்டில் கஷ்டமான சூழல் நிலவுகிறது. மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்பால் கல்வித் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தில்லி பள்ளிகளின் மாணவா்களை ஒருங்கிணைத்து இணையம் மூலம் கற்றலை தில்லி கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கல்வித் துறை செயலரை இடமாற்றம் செய்வது தில்லி கல்வித் துறையை பாதிக்கும். மேலும், மாணவா்கள் பாதிப்படைவாா்கள். நிகழ் கல்வி அமா்வு வரும் 2021 மாா்ச் மாதம் முடிவடையவுள்ளது. அதுவரை, வினய் பூஷணை இடமாற்றம் செய்யக் கூடாது என்று கடிதத்தில் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT